Wednesday, June 12, 2013

கேள்வி இங்கே பதில்...???



உன்னை நான்
பார்த்த பொழுது
எனக்குள்
ஒரு போராட்டம்
என் நினைவுகளும்
உனக்குள் சங்கமித்து
உன்னிடம்
என் நினைவுகளும்
உறவாடுமா இல்லை
யார் இவன் என்ற
கேள்வி மட்டும்
உனக்குள் வந்து போகுமா...!!!

பார்த்து பார்த்து
நான் மட்டும்
எனக்குள்
பிதற்றிக் கொள்கின்றேன்
நீ போகும்
பாதை கண்டு
என் மனதையும்
சிதறடிக்கின்றேன்
என்னவளே
நீ மட்டும்
நின்று பார்க்காது
போகின்றாயே
நினைவில்லையா?
இல்லை மனமில்லையா...!!!

பைத்தியமாகவே
உன் நினைவுகளை
மட்டும் சுமந்து
தினம் சாகின்றேன்
நீ நடந்த பாதைகளில்
என் பாடையும்
நலமாக போகவேண்டும்
என்னவளே
அன்றாவது
உனக்கும் தெரியட்டும்
நான் யார் என்று?
ஏன் இவன் இன்று...???

No comments:

Post a Comment