மருமகன் திருமணம்
இலங்கையில் கொண்டாட்டம்
அவன் பட்டம் பெற்று
பெருமை கொண்டதோ
இலண்டன் மாநகரம்...!!!
வழியனுப்ப சென்றேன்
என் மனம்
குளிர்ச்சி கொள்ளவே...
விமான நிலையம்
அங்கே வழியனுப்ப
வந்தவர்களின் ஏக்கங்கள்
சில துளிகள்
என்னையும்
வாட்டிச் சென்றதே...!!!
தாயகம்
நோக்கி வழியனுப்ப
வந்தவர்கள் இதயம்
வேறுவிதமாக துடித்தது
அவர்கள் துடிப்பும்
என் இதயத்தில் விழுந்து
கீறிவிட்டுப் சென்றது...!!!
தாயக கனவுகள்
எங்கள் கால் அங்கே
முத்தமிட முடியாத
கொடூர ஆதிக்கங்கள்
மனம் இருந்தும்
வழிதெரியாத
ஏக்கங்கள்
எனக்குள்ளும்
வந்து குத்திக்கொன்டதே...!!!
என் கண்களிலோ
ஏக்கம்
சொந்த மண்ணில்
கால் பதிக்க
முடியாத தாக்கம்...!!!
மருமகன் கைகாட்டி
மறைந்துகொண்டு
இருந்தான்
சோதனைகள் முடித்து
என் இதயமும் கண்ணீரில்
நனைந்துகொண்டு இருந்தது
என் சோதனைகள் முடிந்து
எப்பொழுது நானும்????????...!!!
No comments:
Post a Comment