Wednesday, June 12, 2013

முகமூடி...!!!



வெண்ணிற மேனியில்
உன் அழகை
மறைத்துவைத்து
யாருக்காக காத்து
இருக்கின்றாய்
என் கண்களை மட்டும்
தினம் எதற்கு
நீயும் சீண்டிப்
பார்க்கின்றாய் ...!!!

கனவுலகம் ஒன்று
தோன்றி தினமும்
உன் நினைவிலேயே
என்னை வந்து
தாலாட்டி விட்டு
மறைந்து விடுகின்றதே
மாயமா இல்லை
உன் நினைவில் வந்த
மோகம் தானோ...!!!

புதிய
எண்ணங்கள் வந்து
எனக்குள் புகுந்து
புழுவாகத் துடிப்பதால் தான்
புரியாத பாஷைகளும்
தினமும் என்
வாயில் வந்து
முணு முணுக்கின்றதோ...!!!

உன்னைக் கண்டதில்
வந்த ஏக்கமா இல்லை
எனக்குள் நீ வந்ததில்
இந்த மாற்றமா...
பாடாய்ப் படுத்தும்
உன் முகமூடிக்குள்
எதனை நினைத்து
என் நித்திரையை
தொலைக்கின்றாயோ
தொலைகின்றேன் நானும்...!!!

No comments:

Post a Comment