Wednesday, June 19, 2013

வெறுத்துப் போன மனசு....!!!




வாழ்வில்...
வசந்தம் மட்டும்...
வீசிக்கொண்டு...
இருந்ததே...
திடீர் என்று வந்த...
புயல் காற்றினால்...
எல்லாமே திசை மாறி...
சிதைந்து விட்டதே...!!!

தேடிச் சென்று...
புயலை...
அணைத்துக் கொண்டேனா...
இல்லை...
விதி வந்து...
விளையாடியதால்...
என்னை....
அழித்துக் கொண்டேனா...!!!

வாழ்வில் எதையோ...
பறிகொடுத்தது போல்...
உணர்கின்றேனே...
தனிமையை தேடித் தேடி...
அணைத்துக்...
கொள்கின்றேனே...!!!

மாசு பட்ட மனசு போல்...
பிதற்றுகின்றேன்...
மனதால் கெட்டது...
நான் தான்...
என்று...
கொஞ்சம் தேற்றுகின்றேன்...!!!

யாரிடமும்....
எதற்கும் பணியாத....
என் குணமோ...
இன்று...
குற்ற உணர்வில்...
துடிக்கின்றதே...
என் மனதை...
யார் தான் அறிவாரோ...!!!

வெறுத்துப் போகின்றேன்...
மனதால் தினம் தினம்...
தனிமையில்...
என்னை தள்ளிவிட்டு...
வேடிக்கை பார்க்கும்...
மனிதர்களிடம்...
தோற்றுப் போகின்றேன்...
என் வாழ்வின்...
என்னை பக்குவப் படுத்தும்...
பாடமாகவே...
ஏற்றுக்கொள்கின்றேன்...!!!

No comments:

Post a Comment