உலகில்...
கட்டி வைக்க...
முடியாத மனதால்...
தினம் தினம்...
வாடுகின்றோம்...!!!
ஏதோ...
ஒரு போக்கில்...
அறியாமையில்...
அகலக் கால்கள்....
பதித்து...
அடங்கிவிடுகின்றோமே...!!!
யார் போட்ட சாபமோ....
யாருக்காக....
நாங்கள் போடும்...
வேஷமோ...!!!
தெரிந்துகொண்டும்...
தெரியாதது போல்...
வாழ்வது....
யார் குற்றமோ...!!!
குணங்கள் அறியாது...
மனதில் போடும்...
பந்தங்கள் ...
சொந்தாமாகிவிடுமா...!!!
சோதனைகள்...
தினம் தானே...
வேதனைகளாக...
பிறந்து விடுகின்றனவே...!!!
சாதனைகள்...
என்ன தான் செய்தோம்...
நிம்மதி மூச்சை...
விட முடியாது...
தவிக்கின்றோமே...
சிந்தித்தோமா...
யாரால் எதற்காக ...
ஏங்குகின்றோம்...
எதனை தொலைத்து விட்டு...!!!
மனம் போன...
போக்கில் போய்த்தான்...
பழகி விட்டோம்...
வரும் சோதனைகளை...
சுமப்பதில்...
என்ன தான் தவறை...
கண்டு விட்டோம்...!!!
வாழ்வோம்...
வாழ்ந்து பார்ப்போம்...
வாழும் வரை...
போராட்டத்திலேயே...!!!
No comments:
Post a Comment