அகலக் கால்கள்...
அவதாரம்...
எடுக்கின்றனவே...
நினைவுகள்....
இறக்கைகட்டிப்...
பறப்பதால் தானோ...!!!
சோலைகள்...
நிறங்களை...
மாற்றிக் கொள்கின்றனவே...
என்னதான் வெறுப்போ...
யார் மேல தான்...
இந்த கசப்போ...!!!
புதிய மேகங்கள்...
புதிதாய்....
பிறக்கின்றனவே...
ஓசைகள் வந்து
என்ன தான் ...
தரப் போகின்றனவோ...!!!
முதுமைகள் கூட...
முகம்...
சுழிக்கின்றனவே...
இளமையில்...
என்ன தான் குறைகள்...
கண்டு கொண்டனவோ...!!!
வாழ்வில்...
ஏதோ ஒரு வருத்தம்...
வாதம் செய்து தான்...
நாட்களும் நகர்கின்றதே...!!!
மதிகள் மயங்கி...
விதிகள் மீது...
விடும் அம்புகள்...
எதனை சாதித்து...
உலகை திருத்த...
முயல்கின்றதோ...
யார் அறிவர்...
இந்த மாய...
உலகைத் தான்...!!!
ஏதோ ஒன்று ...
நடந்து கொண்டு தான்...
இருக்கின்றனவே
விம்பங்கள்...
பட்டுத் தெறித்து.-
புதுமையாக மனங்களை...
மழுங்கடித்து...
போதையை...
ஏற்றிக்கொள்கின்றனவே...
எல்லாமே...
ஒரு மாயம் தானே...!!!
No comments:
Post a Comment