Friday, June 14, 2013

முடிவுகள்....!!!



யாரோ
எழுதிவிட்டான்
யாருக்கோ
பாடு பட்டான்
கல்லாகிப்போனது
எங்கள் கனவுப்பாதை...!!!

நிதர்சனங்கள்
நிர்மூலமாகி
நிர்க்கதியாகி நின்றோம்
நீந்திக்கரை
சேரவும்
துடுப்பும் இல்லை
ஒரு
துரும்பும் இல்லை...!!!

வந்தவன்
கதையெல்லாம்
வெட்டியாகிப்போச்சு
மிஞ்சியவன் வாழ்வோ
வேதனையாகிப் போச்சு...!!!

காற்றும் விஷமாகி
சில இதயங்களை
நிறைத்துப்
போனது தான் மிச்சம்
விஷம் கலந்தவர்களின்
கோரத்தாண்டவம்
கொளுத்துப்போனதே...!!!

இனியும் என்ன சோதனை
பொய் பேச்சுக்களில்
மேடைகளும்
முட்டிப்போகின்றதே
முகவுரை
தொலைத்த இனம்
மூச்சு விடக்கூட
இடமின்றி அலையுதே...!!!

இது முடிவா?
முடிவின் ஆரம்பமா?
இல்லை
திராணியற்ற வார்த்தைகளா...!!!

No comments:

Post a Comment