Friday, June 14, 2013

யாரை நம்பி...!!!



தாயை நம்பி
பூமியில் குதித்தேன்
தந்தை
காட்டிய வழியில்
நானும்
சென்றேன்
உடன் பிறந்தோர்
நம்பிக்கையில்
நானும் நடந்தேன்
இன்றோ
ஏதோ விரக்தியில்
எல்லாமே
தப்பாகத்தான் போனதே
தரம் கெட்ட
உலகத்திலும்
நம்பிக்கை தான்
தொலைந்ததே...!!!

ஆண்டவன்
அனுப்பி வைத்த
அழகான மனையாள்
அறிவான
பிள்ளைச்
செல்வங்கள்
இரண்டும் இருந்தும்
ஏதோ ஒரு தனிமை
எனக்குள் வந்து
கோலம்
போடுகின்றனவே
வறுமைகள்
பக்கத்தில்
வரத்தான்
பயந்தோடி விட்டன
இருந்து மனதில் ஒரு
வெறுமை தெரிகின்றதே...!!!

நம்பிக்கை
வைத்தவர்கள்
தடம்
புரள்வதால் தானோ
நானும் வெறுமை
கொண்டேனோ
இல்லை
நானாகவே
தெளிவிழந்து
உலகில்
வாழ்கின்றேனோ
என்றும்
சொந்தக் காலில்
நின்றே பழக்கப்பட்டவன்
யாரை நம்பி வாழ்வேன்
குடும்பம் என்ற
சொந்தக் காலில்
தொடர்ந்து
நடை பயில்கின்றேன்
நம்பிக்கையோடு...!!!

No comments:

Post a Comment