ஏதோ ஒரு
புதிய பரவசம்
என்னை தொட்டு
நலம் விசாரித்தது
உடம்பெல்லாம்
புத்துயிர் பெற்று
புன்னகைத்தது...!!!
மனதை
உருவி விட்டு
ஒரு இன்பக்காற்று
வந்து
முத்தமிட்டது...!!!
எனக்கே புரியாத
ஒரு ஏக்கம்
ஏன் இந்தத் தாக்கம்
வானத்தில் இருந்து
புதிய ஓசையா
இல்லை
புதிய பரி பாஷையா...!!!
கண்கள்
பேச மறுக்கின்றது
காதில் வந்து
சொல்லிப்
போனதோடு சரியா
நிச்சயம் என்னில்
ஒரு மாறுதல்
தெரிகின்றது
எதனைக் கண்டேன்
நான் இன்று...!!!
இழவு காத்த
கிளிபோல
துடித்த மனசு
புது உவகை
கொண்டதேன்...!!!
மனதோ வலிக்கின்றது
ஆனாலும்
இன்பத்தின்
வழியாகவே
தெரிகின்றதே...!!!
கண்களும்
குளமாகின்றது
கருத்தோ
மாறுபடுகின்றதே
நிலவவள் நெஞ்சை
தொட்டதால் தானோ
எல்லாமே
மாறி விட்டதோ...!!!
No comments:
Post a Comment