Wednesday, June 12, 2013

தவிக்கின்றேன்...!!!





பகலில் ஒரு
நிலவு தோன்றி
என்னைப் பார்த்து
ஏதோ பாடுகின்றதே
அந்தப் பாடலின்
வரிகள் மட்டும்
வலிகளாக வந்து
வழிகாட்டி செல்கின்றதே...!!!

அவள் முகம்
காணத்தான்
என் கண்களும்
அலை மோதுகின்றனவே
திரும்பாத அவள்
மேனி பட்ட தென்றலின்
நறுமணங்கள் வந்து
என்னை
தழுவிச் செல்வதால்
என் இமைகளும்
மயக்கம் கொண்டதே...!!!

அவள் கலகலத்த
சிரிப்புக்கள் கூட
சிதறி எதையோ
சொல்லத் துடிக்கின்றதே
சோக மேகமொன்று
பற்றிக்கொண்டு
அவளை
பாடாய்ப் படுத்துகின்றதோ...!!!

காற்றின் கீதத்தில்
தளர்ந்து செல்கின்றாளே
அவளை
தாங்கிப் பிடிக்கத்தான்
என் மனமும்
ஏங்கித் தவிக்கின்றதே
தருவாளா
அவள் இதையத்தை
எனக்குள் புதைப்பாளா
தவிக்கின்றேன்
நானும் இங்கே...!!!

No comments:

Post a Comment