Wednesday, June 19, 2013

விடை தெரியாத பயணம்...!!!


ஊர்ப் பருந்து ...
வட்டமடிக்க...
உவமைகள் வந்து...
முட்டி மோத...
காரணமில்லா...
கவிதைகளும்...
பட்டுத் தெறிக்க...
பயணங்கள்....
எங்கே தான் ...
தொடர்கின்றதோ ...!!!

நேற்று முளைத்த...
காளான்கள்...
கண்ணைப் பறிக்க...
கதைகள்...
பல வந்து...
காதோரம்...
சீண்டி செல்ல...
விடை தெரியாது...
ஏனோ...
நானும் துடிக்க...
காலங்கள் ஓடுதே...
கண்ணைக்...
கட்டிக்கொண்டே...!!!

முல்லைக்கு ..
தேர் கொடுத்த...
மன்னவன் அன்றோ...
முதுகில் சவாரி...
செய்யத் துடிக்கும்...
உள்ளங்கள் இன்றோ...!!!

கல்லுக்குள் ஈரம்..
தேடுகின்றேன்...
இல்லை என்று
தெரிந்தும்...
என்னை மறந்து...
ஏன் தானோ...
வாடுகின்றேன்...!!!

விடைகள் தெரியாத...
பயணங்கள்...
என் வாழ்வில்...
பழகிப் போனதே...
இருந்தும்...
பயணிக்கின்றேன்...
தினமும்...
ஏதோ ஒரு...
நம்பிக்கையில்...!!!

No comments:

Post a Comment